24 663a57d6b6a0b
இலங்கைசெய்திகள்

ஒருபால் திருமணம் குறித்து அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை

Share

ஒருபால் திருமணம் குறித்து அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை

ஒருபால் திருமணங்களை அங்கீகரிக்கும் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது என பெங்கமுவே நாலக்க தேரர் எச்சரிக்க விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் இந்த சட்டத்தை நிறைவேற்றியதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊர்களுக்கு செல்ல முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் உள்ளிட்ட சிங்கள பௌத்த தேசியவாத அமைப்புக்கள் இந்த சட்டத்தை எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் தேர்தலுக்காக ஆசி வேண்டி அரசியல்வாதிகள் வரக்கூடாது. மேலும், இந்த சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்படக் கூடாது

ஒருபால் திருமணம் குறித்து அரசியல்வாதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Mps On Same Sex Marriage Vote

தவறுதலாகவேனும் சட்டம் நிறைவேற்றப்பட்டால் அது இலங்கை கலாச்சாரத்திலும் குடும்ப கட்டமைப்பிலும் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும்.

ஒரு பால் திருமணங்களை எந்தவொரு சமயமும் அங்கீகரிக்கவில்லை.

மேற்குலக நாடுகளில் பல்வகைத் தன்மையுடைய கலாச்சாரங்களில் ஒருபால் திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்டாலும் அதனை இலங்கையில் பின்பற்றத் தேவையில்லை.

பெளத்த கொள்கைகளுடன் கூடிய எமது கலாச்சாரத்திற்கு இந்த ஒருபால் திருமணங்கள் பொருத்தமற்றது.

அத்தோடு, யாருடைய தேவைக்காக இந்த சட்டம் நிறைவேற்றப்படுகின்றது என்ற சந்தேகம் எழுகிறது.

வெளிநாட்டு சக்திகள் அல்லது அரசாங்கத்தின் பலம்பொருந்தியவர்களினால் இந்த சட்டம் நிறைவேற்ற முயற்சிக்கப்படலாம்.” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
08 4
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை அருகே மற்றொரு ஈரானிய கப்பல்: மனிதாபிமான அடிப்படையில் அனுமதி கோரும் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையின் பிரத்தியேகப் பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நிலைகொண்டுள்ள இரண்டாவது ஈரானிய கப்பல் (IRINS Bushehr என...

07 5
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு வான்பரப்பு மூடல்: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 12 விமான சேவைகளை ரத்து செய்தது!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ப் பதற்றம் மற்றும் வான்பரப்பு மூடப்பட்டிருப்பதன் காரணமாக, ஸ்ரீலங்கன்...

06 4
செய்திகள்உலகம்

ஈரான் எல்லையில் அதிரடி: ஊடுருவல் முயற்சியைத் தடுத்ததாக IRGC அறிவிப்பு!

ஈரானின் மேற்கு எல்லைப் பகுதியினூடாக ஊடுருவித் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்த பிரிவினைவாதக் குழுக்கள் மீது, ஈரான்...

05 4
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு பதற்றம்: அவுஸ்திரேலியா தனது இராணுவ விமானங்களை அனுப்பி வைத்தது!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியா தனது...