24 66275b8661cd8
இலங்கைசெய்திகள்

மதுபான கடை உரிமங்களை நண்பர்களுக்காக பெற்றுக்கொடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Share

மதுபான கடை உரிமங்களை நண்பர்களுக்காக பெற்றுக்கொடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஆகிய கட்சிகளின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மதுபான கடை உரிமங்களை தங்கள் நண்பர்களுக்காக பெற்றுக்கொடுக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள் பெரும் தரகு பணத்துக்காக இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி (Kandy) போன்ற சில மாவட்டங்களின் மதத் தலைவர்கள் மதுபானக் கடைகளை அமைக்கும் திட்டம் குறித்தும், உரிமம் பெற உதவியவர்கள் குறித்தும் விசாரித்ததையடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) கவனத்திற்கு இந்த விடயம் கொண்டு வரப்பட்டதையடுத்து, அவர் இது தொடர்பில் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார்.

மேலும், அரசியல்வாதிகள் சிலர், இத்தகைய மதுபான கடைகளை நேரடியாகவோ அல்லது தங்கள் பிரதிநிதிகள் மூலமாகவோ வைத்திருக்கிறார்கள்.

இதற்கிடையில், கட்சித் தலைமையின் அனுமதியின்றி, தமது தொகுதிகளில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காக அரசாங்கத்திடம் இருந்து நிதி ஒதுக்கீட்டை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கேள்வி எழுப்ப உள்ளதால், இன்றைய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுவில் வாத விவாதங்கள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...