images 7 6
இலங்கைஅரசியல்செய்திகள்

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நீதிமன்றினால் பிணையில் விடுவிப்பு!

Share

பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இன்று (24) கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நீதிமன்றத்தினால் மீண்டும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தனது கடமையைச் செய்துகொண்டிருந்தபோது, அவருக்கு இடையூறு விளைவித்ததாக அர்ச்சுனா மீது வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ஏற்கனவே பிணையில் இருந்த அர்ச்சுனா, நேற்று (23) நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராகக் கோட்டை நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

பிடியாணைக்கு இணங்க இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அவர், கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதவான், அவரை மீண்டும் பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.

நாடாளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா, சபையில் தனது கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் மூலம் தொடர்ச்சியாகச் செய்திகளில் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...