images 7 6
இலங்கைஅரசியல்செய்திகள்

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நீதிமன்றினால் பிணையில் விடுவிப்பு!

Share

பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இன்று (24) கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நீதிமன்றத்தினால் மீண்டும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தனது கடமையைச் செய்துகொண்டிருந்தபோது, அவருக்கு இடையூறு விளைவித்ததாக அர்ச்சுனா மீது வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ஏற்கனவே பிணையில் இருந்த அர்ச்சுனா, நேற்று (23) நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராகக் கோட்டை நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

பிடியாணைக்கு இணங்க இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அவர், கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதவான், அவரை மீண்டும் பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.

நாடாளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா, சபையில் தனது கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் மூலம் தொடர்ச்சியாகச் செய்திகளில் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...