tamilnaadi 54 scaled
இலங்கைசெய்திகள்

மூன்றாம் நபர் வாகன காப்புறுதி தொடர்பில் தீர்மானம்

Share

மூன்றாம் நபர் வாகன காப்புறுதி தொடர்பில் தீர்மானம்

மூன்றாம் நபர் காப்புறுதி கொண்ட வாகனம் மோதி விபத்துக்குள்ளானால் நீதிமன்றத்திற்கு செல்லாமல் அந்த நபருக்கு இழப்பீடு வழங்க போக்குவரத்து அமைச்சகத்துடன் காப்பீட்டு நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன.

மோட்டார் போக்குவரத்து சட்டத்தில் இந்த விதிமுறைகளை உள்ளடக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மார்ச் முதலாம் திகதிக்குள் திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள சுமார் நாற்பது காப்புறுதி நிறுவனங்கள் மற்றும் காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழுவுடன் கலந்துரையாடியதன் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அதிகபட்சமாக ஐந்து இலட்சம் ரூபாய்க்கு உட்பட்டு இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளானவருக்கு இழப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லாவிட்டால், இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

2018ல் 562 பேருக்கும், 2019ல் 653 பேருக்கும், 2020ல் 449 பேருக்கும், 2021ல் 3500 பேருக்கும், 2022ல் 423 பேருக்கும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...