tamilnaadi 55 scaled
இலங்கைசெய்திகள்

அனுரகுமாரவை சாடும் தென்னிலங்கை அரசியல்வாதி

Share

அனுரகுமாரவை சாடும் தென்னிலங்கை அரசியல்வாதி

ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார முட்டாள்தனமான காரணங்களை கூறி வருவதாக மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

விவாதமொன்றுக்கு வருமாறு விடுத்த பகிரங்க அழைப்பினை அனுர நிராகரித்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அனுரகுமார திஸாநாயக்கவிற்கு தைரியமும் நம்பிக்கையும் இருந்தால் முட்டாள்தனமான கதைகளை பேசாது விவாதத்திற்கு வர வேண்டுமென தெரிவித்துள்ளார்.

அரசியல் நோக்கத்தைக் கொண்ட ஒரே கட்சி தமது கட்சி என அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவி வரும் பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளை தீர்க்கும் ஆற்றல் வேறு எந்தவொரு தரப்பிற்கும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்கள பௌத்த தேசிய வாதத்தை ஏற்றுக்கொள்வதாக திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் நலின்த சில்வாவின் ஆக்கங்கள் தம்மை அதிகளவில் பாதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பலர் இந்த ஆக்கங்களை பிழையாக புரிந்து கொண்டுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...

Untitled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 6-ஆம் நாளில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஆறாம் நாள்...