high capacity bikes c5c03c9907
இலங்கைசெய்திகள்

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்: 2025 இல் 2,23,423 மோட்டார் சைக்கிள்கள் பதிவு!

Share

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அதிகளவான எண்ணிக்கையில் மோட்டார் சைக்கிள்களே பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் 223,423 மோட்டார் சைக்கிள்கள் 2025 ஆம் ஆண்டின் இதுவரையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார்.

அதற்கு அடுத்தபடியாக 55,338 கார்களும், 13,850 முச்சக்கர வண்டிகளும், இந்த அனைத்து வகைகளையும் உள்ளடக்கியதாக 35,268 மின்சார வாகனங்களும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய, இந்த வருடம் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட வருமான இலக்குகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

திணைக்களத்திற்கு இந்த வருட இலக்காக 16 பில்லியன் ரூபா வழங்கப்பட்டிருந்ததாகவும், அந்த இலக்கையும் தாண்டி கடந்த நவம்பர் 30 ஆம் திகதி 17.8 பில்லியன் ரூபாய் வருமானத்தை திணைக்களத்தால் ஈட்ட முடிந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் ஆண்டிற்காக 18 பில்லியன் ரூபாய் வருமான இலக்கை திறைசேரி திணைக்களத்திற்கு வழங்கியுள்ளதாகவும், அந்த இலக்கையும் அடைய மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு முடியும் எனவும் அவர் மேலும் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...