விளக்கமறியல்
இலங்கைசெய்திகள்

5 வயது மகனை ஆற்றில் தள்ளிவிட்ட தாய்க்கு விளக்கமறியல்!

Share

வத்தளை, ஹெந்தலை – கதிரான பாலத்துக்கு அருகில் களனி ஆற்றில் தனது ஐந்து வயது மகனைத் தள்ளிவிட்டு, ஆற்றில் குதித்து உயிரைத் துறக்க முயன்ற தாய் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வத்தளை, ஹெந்தலை – கதிரான பாலத்துக்கு அருகில் களனி ஆற்றில் தனது ஐந்து வயது மகனைத் தள்ளிவிட்டு, ஆற்றில் குதித்து உயிரைத் துறக்க முயன்ற குறித்த பெண் வத்தளைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இந்தப் பெண் நேற்றிரவு 7.30 மணியளவில் தனது மகனைத் தள்ளிவிட்டு, ஆற்றில் குதிக்க முற்பட்டபோது, வீதியால் பயணித்த நபர் ஒருவர் அவரைத் தடுத்து நிறுத்தியிருந்தார் .

இதையடுத்து, அவர் ஹெந்தலை காவலரணில் தடுத்துவைக்கப்பட்டு பின்னர் வத்தளைப் பொலிஸாரால் கைதுசெய்து அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

இந்நிலையில், ஆற்றில் தள்ளிவிடப்பட்ட சிறுவனைக் கண்டுபிடிக்க படகுகள் மூலம் கடற்படையினர் மற்றும் பொலிஸார் தேடுதல் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
New Project 119
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப சீனா துணை நிற்கும் – சீன கம்யூனிஸ்ட் கட்சித் தூதுக்குழு உறுதி!

இலங்கையின் ‘மறுசீரமைப்பு’ (Rebuilding Sri Lanka) திட்டத்திற்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளத்...

MediaFile 1 6
செய்திகள்அரசியல்இலங்கை

இந்திய அமைச்சருடன் மலையகத் தலைவர்கள் சந்திப்பு: 4 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார் செந்தில் தொண்டமான்!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை, இலங்கைத் தொழிலாளர்...

23 64aba3174f4d9
செய்திகள்இலங்கை

வானிலை முன்னறிவிப்பு: சில மாவட்டங்களில் மழை; இரு பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும்!

நாட்டின் சில மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என்றும், குறிப்பிட்ட சில கடற்கரைப் பகுதிகளில் காற்றின் வேகம்...

MediaFile 17
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மட்டக்களப்பில் கிணற்றிலிருந்து ஓய்வுபெற்ற ஆசிரியை சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திசைவீரசிங்கம் சதுக்கம் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து, இன்று (23)...