15 18
இலங்கைசெய்திகள்

இலங்கையை உலுக்கிய பெரும் சோகம் – தாயும் மகனும் மரணம்

Share

இலங்கையை உலுக்கிய பெரும் சோகம் – தாயும் மகனும் மரணம்

தென்னிலங்கையில் மகனின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத தாயும் உயிரிழந்த சோகமான சம்பவம் பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

பிங்கிரிய, பிரசன்னகமகம்மன பகுதியை சேர்ந்த 45 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான சஞ்சீவ பிரசன்ன மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இதனை அறிந்த 70 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான சந்திரா பியசிலியும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த சஞ்சீவ கடந்த 15ஆம் திகதி மாலை திடீரென மாரடைப்பு காரணமாக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

இந்த சோக செய்தியை வீட்டிற்கு தெரிவிக்கும் போது தாய் சந்திரா பியாசிலி நெஞ்சு வலிப்பதாக கூறி தரையில் சாய்ந்துள்ளார்.

உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், எனினும் சில மணிநேரங்களில் அவரும் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

தாய் மற்றும் மகனின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை இடம்பெறவுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...