8 34
இலங்கைசெய்திகள்

10 மாத ஆண் குழந்தைக்கு எமனான தாய்! இலங்கையில் மற்றுமொரு துயர சம்பவம்

Share

10 மாத ஆண் குழந்தைக்கு எமனான தாய்! இலங்கையில் மற்றுமொரு துயர சம்பவம்

ஹபரண – பலுகஸ்வெவ பகுதியில் 10 மாத ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.

பலுகஸ்வெவ பகுதியில் உள்ள வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 10 மாத ஆண் குழந்தை மர்மமாக உயிரிழந்துள்ளதாக நேற்றையதினம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குழந்தையின் மரணத்திற்கு, அதன் தாயார் தான் காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

புலனாகம – பலுகஸ்வெவ பகுதியில் உள்ள வீட்டில், தாய் மற்றும் தந்தை, சகோதரி, சகோதரன் ஆகியோருடன் குழந்தை வசித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு(16) தந்தை வெளியே சென்ற சமயம் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தையின் தாயார் இரவு நேரத்தில் வீட்டின் பின்புறத்தில் உள்ள நீர் குழாய்க்குள் குழந்தையை அமிழ்த்தி விட்டு பின்னர் மீண்டும் கட்டிலுக்கு கொண்டு வந்து கிடத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனை அந்த தாயார் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், விசாரணைகளின் பின்னர், இது ஒரு கொலை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாயாரான 34 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணகைளை ஹபரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...