tamilni 304 scaled
இலங்கைசெய்திகள்

இளம் தாய் – மகள் கொலை! கொலைக் குற்றம் சாட்டப்பட்ட நபரின் விபரீத முடிவு

Share

இளம் தாய் – மகள் கொலை! கொலைக் குற்றம் சாட்டப்பட்ட நபரின் விபரீத முடிவு

அண்மையில் ஹொரன பகுதியில் இளம் தாயையும் குழந்தையையும் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் உயிரை மாய்த்துள்ளர்.

அங்குருவாதொட்ட உருதுடாவ பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் அண்மையில் இளம் தாயையும் 11 மாத பெண் குழந்தையையும் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

களுத்துறை மல்வத்தை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராணுவ சிப்பாயான சந்தேகநபர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வரகாகொட சல்கஸ் வத்த மாவத்தை பிரதேசத்தில் வசிக்கும் பிரியன் மதுரங்க என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் அங்குருவாதொட்ட உருதுடாவ பிரதேசத்தில் வசிப்பவராகும்.

24 வயதான வாசனா குமாரி மற்றும் 11 மாத பெண் குழந்தை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அங்குருவாதொட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார்.

உயிரிழிந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 23
செய்திகள்இலங்கை

கொட்டாஞ்சேனைக் கொலைச் சம்பவம்: ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் துப்பாக்கிதாரி கைது – 72 மணி நேர தடுப்புக் காவலில் விசாரணை!

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி, ‘ஐஸ்’...

image 17
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் அதிரடி உயர்வு: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் (Driving License) வழங்குவதற்கான கட்டணங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. போக்குவரத்து,...

MediaFile 14
செய்திகள்இலங்கை

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.00 –...

20250719 124156
செய்திகள்இலங்கை

இந்திய முதலீட்டாளர்களுக்கு இலங்கை அழைப்பு: சுற்றுலா மற்றும் திரைப்படத் திட்டங்களில் ஒத்துழைக்க விஜித ஹேரத் வலியுறுத்தல்!

நாட்டில் புதிய சுற்றுலா முயற்சிகள் மற்றும் திரைப்படத் திட்டங்களை ஆராய்வதற்காக இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் திரைப்படத்...