22 11
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற நடவடிக்கைகளில் அதிக பங்களிப்பை வழங்கியவர்களின் விபரம் வெளியானது

Share

நாடாளுமன்ற நடவடிக்கைகளில் அதிக பங்களிப்பை வழங்கியவர்களின் விபரம் வெளியானது

கடந்த நாடாளுமன்ற நடவடிக்கைகளில் அதிக பங்களிப்பை வழங்கிய ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆராயும் (parliament.lk) இணையத்தளம் அறிவித்துள்ளது.

இதன்படி, கடந்த நாடாளுமன்றத்தில் அதிக பங்களிப்பை வழங்கிய உறுப்பினராக கண்டி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல பெயரிடப்பட்டுள்ளார். இவர் 383 நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்றுள்ளார்.

இதனையடுத்து முன்னாள் அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் பங்களிப்பு அதிகமாக இருந்துள்ளதுடன், இவர் 358 நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்றுள்ளார்.

இதன் பின்னர், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அதிகூடிய நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்றுள்ளதுடன்,பொருளாதாரம் மற்றும் நிதித் துறையில் அதிக பங்களிப்பை அளித்துள்ள அவர் 344 அமர்வுகளில் பங்கேற்றுள்ளார்.

மாத்தறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன 307 நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டு நான்காவது இடத்தினை பெற்றுள்ளார்.

ஐந்தாவது இடத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே பெயரிடப்பட்டுள்ளதுடன்,. 292 நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்றுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...