rtjy 39 scaled
இலங்கைசெய்திகள்

தங்க கடத்தலை முறையடித்த இலங்கை கடற்படை

Share

தங்க கடத்தலை முறையடித்த இலங்கை கடற்படை

நாட்டில் இருந்து கடல் மார்க்கமாக கடத்தமுயன்ற 2 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள சட்டவிரோத தங்கத்துடன் ஐவர் மன்னாரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினர் விசேட நடவடிக்கையின் போது மன்னார் – ஒலைத்தொடுவையில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கையின் மூலம் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட படகு, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 28 முதல் 56 வயதுக்குட்பட்ட வங்காலை மற்றும் மன்னார் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறையில் உள்ள சுங்கத் தடுப்பு சந்தேகநபர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
இஷாரா செவ்வந்தி
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டார் இஷாரா செவ்வந்தி!

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்ருந்த சந்தேக நபரான இஷாரா...

சுரேஷ் சலே 10
இலங்கை

சுரேஷ் சலேயினால் முன்வைக்கப்பட்ட மனு மீதான விசாரணைகள் இம்மாதம் ௨௫ ஆம் திகதி!

அரச புலனாய்வுப் பிரிவு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே யினால் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத...

person calling the police
இலங்கை

தலைமறைவான கொலைக்குற்றவாளி – பொதுமக்களின் உதவியினை கோரிய காவல்துறை!

ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்பொல பகுதியில் பெண் ஒருவரைத் தாக்கிக் கொலை செய்த சம்பவம் தொடர்பில்...

interpol
இலங்கை

இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ள சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட குற்றவாளிகள்!

மலேசியாவில் கைது செய்யப்பட்ட முக்கிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான தனுஷ்க கௌசல்ய என்ற “ரத்மலானே சைமா” உட்பட...