15 21
இலங்கைசெய்திகள்

தேர்தல் விதி மீறல் குறித்த முறைப்பாடுகள் அதிகரிப்பு

Share

தேர்தல் விதி மீறல் குறித்த முறைப்பாடுகள் அதிகரிப்பு

தேர்தல் விதி மீறல் குறித்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை 925 வரையில் அதிகரித்துள்ளதாக ஆணைக்குழு தகவல்களை வெளியிட்டுள்ளது.

மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையம் மற்றும் தேசிய தேர்தல் முகாமைத்துவ நிலையம் என்பனவற்றுக்கு இவ்வாறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதன்போது, சொத்துக்கள் துஸ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் விதி மீறல்கள் தொடர்பில் இவ்வாறு முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
10 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை அதிகரிப்பு: மயூரு நெத்தி குமாரகேவின் விளக்கம் மற்றும் பின்னணி

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை...

09 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து!

நீண்ட காலமாகத் தேக்கமடைந்திருந்த மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம்,...

08 9
உலகம்செய்திகள்

லெபனானில் போர் மோதல் தீவிரம்: சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு!

லெபனானில் தற்போது இடம்பெற்று வரும் கடுமையான போர் மோதல்கள் காரணமாக, சுமார் 7 லட்சம் மக்கள்...

07 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலையேற்றம்: பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் 5 சதவீதத்தால் உயர்வு!

எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றத்தைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 10) முதல் அமுலுக்கு வரும்...