5 37
இலங்கைசெய்திகள்

ரஷ்யாவினால் வழங்கப்பட்ட இலவச உரத்தின் தரம் குறித்து வெளியான அறிவிப்பு

Share

ரஷ்யாவினால் வழங்கப்பட்ட இலவச உரத்தின் தரம் குறித்து வெளியான அறிவிப்பு

ரஷ்யாவில் (Russia) உற்பத்தி செய்யப்பட்டு இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மியூரேட் பொட்டாஷ் உரத்தின் (Muriate of Potash) இருப்பு தரத்திற்கு ஏற்ப உள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த விடயத்தினை விவசாயம், கால்நடை வளங்கள், நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தெரிவித்துள்ளது.

உர கையிருப்பின் நிறம் குறித்து விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகளுக்கு இடையே சில விவாதங்கள் நடந்ததால், அமைச்சு இது தொடர்பாக விசாரணை முன்னெடுத்திருந்தது.

இந்த நிலையில் மண் விஞ்ஞான நிபுணர் ரேணுகா சில்வா (Renuka Silva) இந்த உரங்களின் தரத்தை சான்றளித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பில் எவ்வித சட்டவிரோத அச்சமும் கொள்ள வேண்டாம் என விவசாய அமைச்சு (Ministry of Agriculture) விவசாயிகளுக்கு அறிவித்துள்ளது.

இதேவேளை திருகோணமலை (Trincomalee) – கிண்ணியா கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு ரஷ்யா அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இலவச மானிய பசளை கடந்த 18ஆம் திகதி விநியோகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
kurunagale
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே...

articles2FzfwGOGwTVgau0U5wzDGJ
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல்: உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12 நகரங்களில் நேற்று (31) பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த...

nipah scare kyrgyzstan bans animal products imports from v0 KAIhqUTvKj
செய்திகள்உலகம்

இந்திய இறைச்சி மற்றும் விலங்குப் பொருட்களுக்கு கிர்கிஸ்தான் தடை: நிபா வைரஸ் அச்சமே காரணம்!

இந்தியாவில் நிபா (Nipah) வைரஸ் பரவல் நிலவுவதாகக் கூறி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும்...

image cb55c225d6
செய்திகள்இலங்கை

சந்தையில் எகிறியது இஞ்சியின் விலை: ஒரு கிலோ 2,000 ரூபாவைத் தாண்டியது!

இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும்...