24 66395bbed4e2b
இலங்கைசெய்திகள்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : வங்கிகளுக்கு வருகிறது பணம்

Share

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : வங்கிகளுக்கு வருகிறது பணம்

நெற்செய்கைக்கான பூந்தி உரம் அல்லது மியூரேட் ஒப் பொட்டாஷ் (MOP) கொள்வனவுக்கான பணம் இன்று (7) முதல் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒரு ஹெக்டேருக்கு 15000 ரூபாய் வீதம் பணம் வரவு வைக்கப்படவுள்ளது.

கடந்த சில பருவங்களில் நெல் சாகுபடிக்கு பூந்தி உரமிடுதல் அளவு குறைந்துள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நெற்பயிர்களை வலுப்படுத்துவதற்கும், நெல் விதைகளை முழுமையாக்குவதற்கும் எம்ஓபி உரத்தைப் பயன்படுத்துவது கட்டாயம் என்று விவசாயத் திணைக்களம் குறிப்பிடுகிறது.

அதிக பருவத்தில் எம்ஓபி உரம் 30,000 மெட்ரிக் தொன் தேவை என்றாலும், அதில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே விவசாயிகள் கொள்முதல் செய்துள்ளனர்.

குறிப்பாக நெற்செய்கையை முடித்துள்ள விவசாயிகளுக்கு இந்த நிதி ஒதுக்கீட்டை வழங்குமாறு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்தார்.

Share
தொடர்புடையது
1765326736 Sri Lanka showers Met 6
செய்திகள்இலங்கை

தீவிரமடையும் மழையினால் நீர்நிலைகள் நிரம்புகின்றன: வடகிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் மீண்டும் அதிதீவிர மழைவீழ்ச்சி பதிவாகுமாயின், நீர்நிலைகளின் நீர்மட்டம்...

image 870x 66fcf5f77e960
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு: இது வெறும் வாக்குறுதி அல்ல, செயல் வடிவம் பெறும்- அமைச்சர் விஜித ஹேரத் உறுதி!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் என்றும், கடந்த காலங்களைப் போலன்றி...

IMG 2110
செய்திகள்உலகம்

சீனாவில் தேவாலயங்கள் மீது கடும் நடவடிக்கை: கட்டிடம் இடிப்பு மற்றும் முக்கிய தலைவர்கள் கைது!

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத ‘நிலத்தடி தேவாலயங்கள்’ (Underground Churches) மீது அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசு...

images 14 1
செய்திகள்உலகம்

வெனிசுவேலா ஜனாதிபதி கைது செய்யப்பட்டது ஐநா கோட்பாடுகளுக்கு எதிரானது – அமைச்சர் பிமல் ரத்நாயக்க கண்டனம்!

ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட வெனிசுவேலா ஜனாதிபதியை அமெரிக்கா கைது செய்துள்ளமையானது சர்வதேச சட்டங்களையும் ஐக்கிய...