24 66395bbed4e2b
இலங்கைசெய்திகள்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : வங்கிகளுக்கு வருகிறது பணம்

Share

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : வங்கிகளுக்கு வருகிறது பணம்

நெற்செய்கைக்கான பூந்தி உரம் அல்லது மியூரேட் ஒப் பொட்டாஷ் (MOP) கொள்வனவுக்கான பணம் இன்று (7) முதல் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒரு ஹெக்டேருக்கு 15000 ரூபாய் வீதம் பணம் வரவு வைக்கப்படவுள்ளது.

கடந்த சில பருவங்களில் நெல் சாகுபடிக்கு பூந்தி உரமிடுதல் அளவு குறைந்துள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நெற்பயிர்களை வலுப்படுத்துவதற்கும், நெல் விதைகளை முழுமையாக்குவதற்கும் எம்ஓபி உரத்தைப் பயன்படுத்துவது கட்டாயம் என்று விவசாயத் திணைக்களம் குறிப்பிடுகிறது.

அதிக பருவத்தில் எம்ஓபி உரம் 30,000 மெட்ரிக் தொன் தேவை என்றாலும், அதில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே விவசாயிகள் கொள்முதல் செய்துள்ளனர்.

குறிப்பாக நெற்செய்கையை முடித்துள்ள விவசாயிகளுக்கு இந்த நிதி ஒதுக்கீட்டை வழங்குமாறு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்தார்.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...