ஒவ்வொரு வீட்டிற்கும் பணம் அச்சிடும் இயந்திரம்!!

1644301862288859 0

பணத்தை அச்சிடுவதன் மூலம் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியுமொன்றால் ஒவ்வொரு வீட்டிற்கும் பணம் அச்சிடும் இயந்திரத்தை வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி எம்பி முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘பணத்தை அச்சடிப்பதன் மூலம் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியுமென்றால், ஒவ்வொரு வீட்டுக்கும் அச்சு இயந்திரம் கொடுத்தால் முடிந்துவிடும்.

பணத்தை அச்சிடுவதைத் தவிர, உற்பத்தியை அதிகரிக்க, முதலீட்டை அதிகரிக்க, பொருட்கள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான எந்த திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை.

பஷில் ராஜபக்ச நிதி அமைச்சராக பதவியேற்ற நாள் முதல் 678 பில்லியன் ரூபாய் அச்சிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக பணவீக்கம் 14% ஆக உயர்ந்துள்ளது.

#SrilankaNews

 

 

Exit mobile version