24 660f58239bb11
இலங்கைசெய்திகள்

சாரதி ஒருவரின் நெகிழ்ச்சியான செயல் : மகிழ்ச்சியில் பல்கலைக்கழக மாணவன்

Share

சாரதி ஒருவரின் நெகிழ்ச்சியான செயல் : மகிழ்ச்சியில் பல்கலைக்கழக மாணவன்

நீர்கொழும்பில் (Negombo) இருந்து கண்டி (Kandy) செல்லும் பேருந்தில் கையடக்க தொலைபேசியை விட்டு சென்ற மாணவனை தேடி ஒப்படைத்த பேருந்து சாரதி தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

மாவனல்லையில் (Mavanalla) தனியார் பல்கலைக்கழகம் செல்வதற்காக நீர்கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பேருந்தில் ஏறிய மாணவன் தனது கையடக்க தொலைபேசியை மறந்து விட்டு சென்றுள்ளார்.

கையடக்க தொலைபேசி தொலைந்து போனதை அறிந்த மாணவன், தனது நண்பரின் கையடக்க தொலைபேசியில் இருந்து அழைத்தபோது, ​​சாரதி தன்னிடம் கையடக்க தொலைபேசி இருப்பதாகவும், மாநகர பேருந்து நிலையம் அருகே வந்து எடுத்துச் செல்லுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால் தனது விரிவுரைகள் ஆரம்பமாகி விட்டதாக கூறிய மாணவன், போது மீண்டும் நீர்கொழும்பு செல்வதால் கையடக்க தொலைபேசி மாவனல்லைக்கு கொண்டு வந்து கொடுப்பதாக சாரதி வாக்குறுதியளித்துள்ளார். அதற்கமைய, அவர் அதனை கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

இப்படிப்பட்ட உன்னதமானவர்கள் இன்னும் நம்மிடையே இருப்பது நமது அதிர்ஷ்டம் எனவும் இந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் கையடக்க தொலைபேசியை பெற்றுக் கொண்ட மாணவனின் தந்தை பேஸ்புக்கில் பதிவொன்றை பதிவிட்டு குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...