tamilni 352 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நிதிப் புலனாய்வுப் பிரிவு மற்றும் மதுவரித் திணைக்களத்திற்கு இடையில் ஒப்பந்தம்

Share

இலங்கையின் நிதிப் புலனாய்வுப் பிரிவு மற்றும் மதுவரித் திணைக்களத்திற்கு இடையில் ஒப்பந்தம்

இலங்கை மத்திய வங்கியில், இலங்கையின் நிதிப் புலனாய்வுப் பிரிவும், இலங்கையின் மதுவரித் திணைக்களமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

பணமோசடி, பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் பிற தொடர்புடைய குற்றங்களைக் தடுக்கும் வகையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைந்துள்ளது.

இந்த ஒப்பந்தம், நிதி பரிவர்த்தனைகள் அறிக்கை சட்ட விதிகளின் கீழ், விசாரணைகள் மற்றும் வழக்குகளுக்காக, இரண்டு நிறுவனங்களுக்கிடையில் தகவல் பகிர்வை பலப்படுத்துகிறது.

முன்னதாக, 2008ஆம் ஆண்டு முதல் இலங்கை நிதிப்புலனாய்வுப் பிரிவு, சர்வதேச நாடுகளுடன் 44 புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும், இலங்கையின் சுங்கம், குடிவரவு, உள்நாட்டு வருமானம் மற்றும் பொலிஸ் உட்பட உள்நாட்டு நிறுவனங்களுடன் 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளது.

இந்தநிலையில் நிதிப்புலனாய்வு பிரிவு மற்றும் மதுவரித் திணைக்களத்திற்கு இடையிலான இந்த கூட்டு முயற்சி, இலங்கையின் நிதி அமைப்பைப் பாதுகாப்பதற்கும் நிதிக் குற்றங்களுக்கு எதிரான உலகளாவிய முயற்சிகளுக்கு பங்களிப்பதற்கும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...