24 6615e9aa610c5
இலங்கைசெய்திகள்

வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்த பெண்

Share

வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்த பெண்

மொனராகலை பிரதேசத்தில் வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரை ஏமாற்றிய சம்பவம் தொடர்பில் பெண் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை மொனராகலை பிரிவின் விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.

சந்தேகநபர் கோட்டை ரஜமஹா விஹார மாவத்தையில் வசிக்கும் 55 வயதுடைய பெண் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி முதல் இந்த வருடம் ஜனவரி மாதம் 11ஆம் திகதி வரை மொனராகலை பிரதேசத்தில் உள்ள 13 ஆண், பெண்களுக்கு வெளிநாட்டு வேலை வழங்குவதாக உறுதியளித்து தனது வங்கிக் கணக்கில் பணத்தை வரவு வைத்துள்ளார்.

இருப்பினும், எவருக்கும் வேலை வழங்கப்படவில்லை என தொம்பகஹவெல பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய நபர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதற்கமைய, மொனராகலைப்பிரிவு விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவின் தளபதி வில்பிரட் சில்வா விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...