24 6615e9aa610c5
இலங்கைசெய்திகள்

வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்த பெண்

Share

வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்த பெண்

மொனராகலை பிரதேசத்தில் வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரை ஏமாற்றிய சம்பவம் தொடர்பில் பெண் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை மொனராகலை பிரிவின் விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.

சந்தேகநபர் கோட்டை ரஜமஹா விஹார மாவத்தையில் வசிக்கும் 55 வயதுடைய பெண் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி முதல் இந்த வருடம் ஜனவரி மாதம் 11ஆம் திகதி வரை மொனராகலை பிரதேசத்தில் உள்ள 13 ஆண், பெண்களுக்கு வெளிநாட்டு வேலை வழங்குவதாக உறுதியளித்து தனது வங்கிக் கணக்கில் பணத்தை வரவு வைத்துள்ளார்.

இருப்பினும், எவருக்கும் வேலை வழங்கப்படவில்லை என தொம்பகஹவெல பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய நபர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதற்கமைய, மொனராகலைப்பிரிவு விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவின் தளபதி வில்பிரட் சில்வா விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...