24 66063236ec41f
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் மக்களை ஏமாற்றி பல மில்லியன் ரூபா மோசடி

Share

இலங்கை முழுவதும் மக்களை ஏமாற்றி பல மில்லியன் ரூபா மோசடி

நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் உணவுப்பொருட்கள் மற்றும் பொருட்களை விற்பனை செய்வதாக நடித்து ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோசடியான முறையில் 50 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை பெற்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

மாரஸ்ஸன பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய நபர் ஒருவர் தலத்துஓயா பொலிஸ் பிரிவில் பதுங்கியிருப்பதாக கடுகன்னாவ பொலிஸ் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் கண்டி, வலப்பனை மற்றும் கடுகன்னாவ உள்ளிட்ட பல பிரதேசங்களில் பணத்தை மோசடி செய்துள்ளார்.

கொழும்பில் இருந்து பொருட்களை லொறிகளுக்கு ஏற்றும் வழியில், குறித்த நபர் பொருட்களை திருடுவதாகவும் மேலும் இந்த பொருட்களில் உரங்கள், சீனி, மா, பருப்பு மற்றும் அரிசி ஆகியவை அடங்குவதாகவும் தெரியவந்துள்ளது.

கடுகன்னாவ பொலிஸாரால் கண்டி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி பிரதான நீதவான் ஸ்ரீநாத் விஜேசேகர உத்தரவிட்டார்.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...