1 12
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Share

கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்ப

அரைகுறையாக நிர்மாண பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து பாடசாலைகளும் முழுமைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (07) வாய்மூல விடை க்கான கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் அஜித் பி.பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ”நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை கருத்திட்டத்தின் கீழ் அரைகுறையாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பாடசாலை கட்டடங்கள் அனைத்தையும் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசாங்கத்தின் திட்டத்தின்படி மூன்று கிலோமீட்டர் எல்லைக்குள் அனைத்து மாணவர்களும் சென்று கல்வி கற்கக்கூடிய ஆரம்ப பாடசாலைகளை உருவாக்குவது எமது நோக்கம்.

அதுபோன்ற பல பாடசாலைகளை இணைத்து முழுமையான அனைத்து வசதிகளையும் கொண்ட பாடசாலைகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் நாம் அவற்றை ஆரம்பத்திலிருந்தே மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கவில்லை.

அவ்வாறான அனைத்து பாடசாலைகளும் மீளாய்வு செய்யப்பட்டு 80 வீதமாக அல்லது 90 வீதமாக நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ள பாடசாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அந்த கட்டடங்களுக்கான நிர்மாண பணிகளை நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை கருத் திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட பல பாடசாலைகளின் நிர்மாணப் பணிகள் 50 விதமாகவும் 75 வீதமாகவும் இடையில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

மேற்படி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் தொடர்பான மீளாய்வு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...