இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

1 12
Share

கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்ப

அரைகுறையாக நிர்மாண பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து பாடசாலைகளும் முழுமைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (07) வாய்மூல விடை க்கான கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் அஜித் பி.பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ”நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை கருத்திட்டத்தின் கீழ் அரைகுறையாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பாடசாலை கட்டடங்கள் அனைத்தையும் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசாங்கத்தின் திட்டத்தின்படி மூன்று கிலோமீட்டர் எல்லைக்குள் அனைத்து மாணவர்களும் சென்று கல்வி கற்கக்கூடிய ஆரம்ப பாடசாலைகளை உருவாக்குவது எமது நோக்கம்.

அதுபோன்ற பல பாடசாலைகளை இணைத்து முழுமையான அனைத்து வசதிகளையும் கொண்ட பாடசாலைகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் நாம் அவற்றை ஆரம்பத்திலிருந்தே மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கவில்லை.

அவ்வாறான அனைத்து பாடசாலைகளும் மீளாய்வு செய்யப்பட்டு 80 வீதமாக அல்லது 90 வீதமாக நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ள பாடசாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அந்த கட்டடங்களுக்கான நிர்மாண பணிகளை நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை கருத் திட்டத்தின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட பல பாடசாலைகளின் நிர்மாணப் பணிகள் 50 விதமாகவும் 75 வீதமாகவும் இடையில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

மேற்படி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் தொடர்பான மீளாய்வு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...