14 24
இலங்கைசெய்திகள்

மித்தெனிய கொலைச் சம்பவம் : சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

Share

மித்தெனிய கொலைச் சம்பவம் : சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

மித்தெனியவில் அண்மையில் இடம்பெற்ற மூன்று கொலைகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் மேலதிக விசாரணைகளுக்காக 72 மணி நேரம் தடுத்து வைக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (18) இரவு ஆறு வயது சிறுமி மற்றும் ஒன்பது வயது சிறுவன் உட்பட மூன்று நபர்களின் மரணம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையின் போது, குற்றம் நடந்த இடத்திற்கு அருகில் இரண்டு கைவிலங்குகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவை ஒரு பொலிஸ் அதிகாரியுடையது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் விளைவாக தங்காலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் 35 வயதுடைய பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.

செவ்வாய்க்கிழமை இரவு மித்தேனிய கடேவத்த சந்திக்கு அருகில் தனது இரண்டு குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது மகனும் மகளும் எம்பிலிப்பிட்டிய மற்றும் தங்காலை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், தங்காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ஆறு வயது மகள் உயிரிழந்ததோடு, ஒன்பது வயது மகன் மறுநாள் இறந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...