download 16 1 5
இலங்கைசெய்திகள்

முகநூலால் சிறுமிக்கு ஏற்பட்ட விபரீதம்!

Share

முகநூலால் சிறுமிக்கு ஏற்பட்ட விபரீதம்!

தம்புள்ளை பிரதேசத்தில் வசிக்கும் 15 வயது சிறுமி, தனது முகநூல் பக்கத்தில் இளைஞனுடன் தொடர்பை ஏற்படுத்தி காதலில் ஈடுபட்டதாகவும், பின்னர் அவனது வீட்டிற்கு வந்த போது, ​​மனிதாபிமானமற்ற பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நிலையில் கதிர்காமம் காவல்துறையினரால் நேற்று முன்தினம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

சிறுமியை கொடூரமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் 27 வயதுடைய நபரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இந்த சிறுமியிடம் கணவன்-மனைவியாக வாழ முன்வந்தபோது, ​​அவர் மறுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். உடலுறவு கொள்ள மறுத்ததால் கடும் கோபமடைந்ததாக கூறப்படும் சந்தேகநபர், வெற்று பீர் போத்தலை சிறுமியின் உடலில் செருகி கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் வைத்திருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இது தவிர, சந்தேக நபர் சிறுமியின் கழுத்தை நெரித்து ,இரத்தம் வரும் வரை மூக்கில் வாயை வைத்து சித்திரவதை செய்ததாக சிறுமி காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

காவல்துறை 119 அவசர அழைப்புப் பிரிவிற்கு செய்யப்பட்ட அறிவித்தலின் பேரில் கதிர்காமம் காவல்துறை அதிகாரிகள் குழு சிறுமி தங்க வைக்கப்பட்டிருந்த வீட்டிற்குச் சென்று சந்தேக நபரைக் கைது செய்து சிறுமியை காவலில் எடுத்தனர்.

தம்புள்ளை பிரதேசத்தில் உள்ள கனிஷ்ட கல்லூரி ஒன்றில் பத்தாம் வகுப்பில் கல்வி கற்று வந்த இந்த சிறுமி முகநூல் மூலம் அடையாளம் காணப்பட்ட சந்தேக நபருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுவரை பார்த்திராத இவருடன் தனது பெற்றோருக்கு தெரிவிக்காமல் இரகசியமாக தப்பிச் சென்றதாக சிறுமி காவல்துறையினரிடம் மேலும் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...