24 667f7cfe0ff26 22
இலங்கைசெய்திகள்

டக்ளஸுடன் இணைந்த கஞ்சன விஜேசேகர : மூன்று மீன்பிடித் துறைமுகங்களுக்கு விஜயம்

Share

டக்ளஸுடன் இணைந்த கஞ்சன விஜேசேகர : மூன்று மீன்பிடித் துறைமுகங்களுக்கு விஜயம்

தென்னிலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda ), மூன்று மீன்பிடித் துறைமுகங்களுக்கு பயணம் செய்துள்ளார்.

டக்ளஸ் தேவானந்தாவின் இந்த பயணத்தில் சிறிலங்கா எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவும் (Kanchana Wijesekera) இணைந்து கொண்டுள்ளதுடன், குறித்த துறைமுகங்களில் உள்ள கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்துள்ளனர்.

சிறிலங்கா கடற்றொழில் அமைச்சினால் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கந்தர மீன்பிடித் துறைமுகத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

அதன் கட்டுமானப்பணிகள் நிறைவுக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், குறித்த துறைமுகப் பகுதியிலுள்ள அதிகாரிகள் மற்றும் கடற்றொழிலாளர்களுடனும் பேச்சுக்களை முன்னெடுத்துள்ளார்.

கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த துறைமுகத்தை அமைக்கும் நடவடிக்கை நான்கு ஆண்டுகள் தாமதமடைந்திருந்ததாக இந்த பயணத்தில் இணைந்து கொண்ட சிறிலங்கா எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...