24 667f7cfe0ff26 22
இலங்கைசெய்திகள்

டக்ளஸுடன் இணைந்த கஞ்சன விஜேசேகர : மூன்று மீன்பிடித் துறைமுகங்களுக்கு விஜயம்

Share

டக்ளஸுடன் இணைந்த கஞ்சன விஜேசேகர : மூன்று மீன்பிடித் துறைமுகங்களுக்கு விஜயம்

தென்னிலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda ), மூன்று மீன்பிடித் துறைமுகங்களுக்கு பயணம் செய்துள்ளார்.

டக்ளஸ் தேவானந்தாவின் இந்த பயணத்தில் சிறிலங்கா எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவும் (Kanchana Wijesekera) இணைந்து கொண்டுள்ளதுடன், குறித்த துறைமுகங்களில் உள்ள கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்துள்ளனர்.

சிறிலங்கா கடற்றொழில் அமைச்சினால் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கந்தர மீன்பிடித் துறைமுகத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

அதன் கட்டுமானப்பணிகள் நிறைவுக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், குறித்த துறைமுகப் பகுதியிலுள்ள அதிகாரிகள் மற்றும் கடற்றொழிலாளர்களுடனும் பேச்சுக்களை முன்னெடுத்துள்ளார்.

கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த துறைமுகத்தை அமைக்கும் நடவடிக்கை நான்கு ஆண்டுகள் தாமதமடைந்திருந்ததாக இந்த பயணத்தில் இணைந்து கொண்ட சிறிலங்கா எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...