10 2
இலங்கைசெய்திகள்

மாவீரர்நாள் நினைவேந்தல் கைதுகள் – பொது பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்

Share

மாவீரர்நாள் நினைவேந்தல் கைதுகள் – பொது பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்

அண்மையில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் நாளை நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) அறிவித்துள்ளார்.

இனவாதத்தை தூண்டி நாட்டை தீக்கிரையாக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் (Minister of Defense) மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயங்களை இன்று (3.12.2024) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சந்தேகநபர்கள் முகப்புத்தகத்தில் வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் கடந்த சில நாட்களில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மருதானை, சுன்னாகம் மற்றும் பத்தேகம பிரதேசங்களைச் சேர்ந்த 28, 35 மற்றும் 45 வயதுடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, முகநூல் ஊடாக பொய்யான விளம்பரங்கள் மற்றும் காணொளிகளை வெளியிட்டு தடை செய்யப்பட்ட அமைப்பின் செயற்பாடுகளை ஊக்குவித்தல் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பைத் தூண்டுதல் போன்ற குற்றங்களின் அடிப்படையில் இந்த சந்தேக நபர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 120 மற்றும் 1978 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 27 வது பிரிவின் கீழ் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

குறித்த விடயம் பொதுமக்கள் மத்தியிலும் அரசியல்வாதிகளாலும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருவதுடன் அநுர அரசிற்கு கடுமையான அழுத்தங்களை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பான அறிக்கை நாளை சமர்ப்பிக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...