11 3
சினிமாசெய்திகள்

தன்ஷிகாவை கைது செய்ய வேண்டும் என முன்னாள் மேனேஜர் புகார்.. நடிகை அதிரடியாக வெளியிட்ட அறிக்கை

Share

தன்ஷிகாவை கைது செய்ய வேண்டும் என முன்னாள் மேனேஜர் புகார்.. நடிகை அதிரடியாக வெளியிட்ட அறிக்கை

நடிகை தன்ஷிகா தமிழில் பேராண்மை, பரதேசி, கபாலி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர். அவர் தெலுங்கிலும் தற்போது நடித்து வருகிறார்.

தன்ஷிகா பற்றி அவரது முன்னாள் மேனேஜர் பிரியா என்பவர் தற்போது ட்விட்டரில் புகார் ஒன்றை கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

தன்ஷிகா மற்றும் இசையமைப்பாளர் அம்ரிஷ் மனைவி கீர்த்தி அனுஷா ஆகியோர் பணம், சொத்து இருப்பவர்களை குறிவைத்து பின்தொடர்ந்து மிரட்டுகிறார்கள் என பிரியா நடிகை சாய் தன்ஷிகா பற்றி புகார் கூறி உள்ளார்.

பிரியாவின் பெற்றோரை மிரட்டி வருவதால் தான் தன்ஷிகாவை கைது செய்ய வேண்டும் என பிரியா ட்விட்டரில் தொடர்ந்து பதிவிட்டு இருக்கிறார்.

இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு நடிகை தன்ஷிகா விளக்கம் கொடுத்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். 2019ல் தான் பிரியாவை நீக்கிவிட்டதாகவும், அவர் சொல்லும் நபர்கள் யார் என்று கூட எனக்கு தெரியாது என தெரிவித்து உள்ளார்.

இதே போல அவர் தொடர்ந்து பதிவிட்டால் சட்டப்படி சந்திப்பேன் என தன்ஷிகா எச்சரிக்கையும் விடுத்து இருக்கிறார்.

Share
தொடர்புடையது
idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...