10 32
இலங்கைசெய்திகள்

மக்களிடம் மன்னிப்பு கோரிய வெளிவிவகார அமைச்சர்

Share

மக்களிடம் மன்னிப்பு கோரிய வெளிவிவகார அமைச்சர்

பொது மக்களிடம் மன்னிப்பு கோருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளுக்காக அவர் இவ்வாறு பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டு ஒன்றை அறிமுகம் செய்வதனால் இவ்வாறு மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

புதிய கடவுச்சீட்டுக்களை கூடிய விரைவில் பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி ஒரு தொகுதி கடவுச்சீட்டுக்கள் கிடைக்கப் பெறும் எனவும் அதுவரையில் கையிருப்பில் இருக்கும் கடவுச்சீட்டுக்களைக் கொண்டு முகாமைத்துவம் செய்ய வேண்டியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டு வழங்குதல் குறித்த பிரச்சினைக்கு இதைவிட சிறந்த தீர்வு வழங்கப்பட்டிருக்கு வேண்டும் என்பதை தாம் ஒப்புக்கொள்வதாக அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

எனவே, வெளிவிவகார அமைச்சர் மற்றும் அரசாங்கத்தின் பிரதிநிதி என்ற வகையில் மக்களிடம் மன்னிப்பு கோருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...