10 32
இலங்கைசெய்திகள்

மக்களிடம் மன்னிப்பு கோரிய வெளிவிவகார அமைச்சர்

Share

மக்களிடம் மன்னிப்பு கோரிய வெளிவிவகார அமைச்சர்

பொது மக்களிடம் மன்னிப்பு கோருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளுக்காக அவர் இவ்வாறு பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டு ஒன்றை அறிமுகம் செய்வதனால் இவ்வாறு மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

புதிய கடவுச்சீட்டுக்களை கூடிய விரைவில் பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி ஒரு தொகுதி கடவுச்சீட்டுக்கள் கிடைக்கப் பெறும் எனவும் அதுவரையில் கையிருப்பில் இருக்கும் கடவுச்சீட்டுக்களைக் கொண்டு முகாமைத்துவம் செய்ய வேண்டியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டு வழங்குதல் குறித்த பிரச்சினைக்கு இதைவிட சிறந்த தீர்வு வழங்கப்பட்டிருக்கு வேண்டும் என்பதை தாம் ஒப்புக்கொள்வதாக அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

எனவே, வெளிவிவகார அமைச்சர் மற்றும் அரசாங்கத்தின் பிரதிநிதி என்ற வகையில் மக்களிடம் மன்னிப்பு கோருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...