இலங்கைசெய்திகள்

அமைச்சர்களின் வீடுகளில் கோடிக்கணக்கில் நிலுவையில் நீர் கட்டணம்

tamilnih 80 scaled
Share

பதினொரு அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான குடிநீர் இணைப்புகளுக்கு கிட்டதட்ட 46 இலட்சம் ரூபாய் நீர்க்கட்டணம் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, காலி மாநகர சபையில் இரண்டு சட்டவிரோத நீர் இணைப்புகள் தொடர்பில் 19 வருடங்களாக 17 இலட்சம் ரூபா செலுத்தப்படவில்லை என்பதுடன் கொழும்பு மாநகர சபையில் 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் சுமார் மூன்று கோடி ரூபா கட்டணம் தற்போது வரை செலுத்தப்படவில்லை என்றும் தேசிய கணக்காய்வுத் திணைக்கள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டின் டிசம்பர் 31ஆம் திகதி வரை வர்த்தகர்கள் மற்றும் பிற கடனாளிகளின் 118 கோடி ரூபாய் கடன் நிலுவை தீர்க்கப்படாமல் இருப்பதாக குறித்த அறிக்கை கூறுகிறது.

மேலும் ஒரு கோடியே எழுபத்தைந்து இலட்சம் ரூபா பெறுமதியான கடன் மற்றும் முன்பணத்தை வசூலிக்காமல் 90 வீதத்துக்கும் அதிகமான பணியாளர்கள் ஓய்வுபெற அனுமதிக்கப்பட்டுள்ள விடயமும் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

அதே போன்று நீர்வழங்கல் சபையின் முன்னாள் தலைவருக்கு திறைசேரியின் அனுமதியின்றி மூன்று வாகனங்களும், மற்றும் முன்னாள் துணைத் தலைவருக்கு இரண்டு வாகனங்களும் பெற்றுக்கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக திறைசேரியின் அனுமதியின்றி மாதாந்தம் 150 லீற்றர் எரிபொருளுக்கு மேலதிகமாக சபையின் முன்னாள் தலைவர் மற்றும் உப தலைவருக்கு 60,000 ரூபா எரிபொருள் முற்பணம் செலுத்தப்பட்டதாகவும் தேசிய கணக்காய்வாளர் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...