mil
இலங்கைசெய்திகள்

பால்மா தட்டுப்பாடு! – பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

Share

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பால்மா தட்டுப்பாட்டுக்கு தீர்வாக பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதனை கால்நடை, கமநல சேவை அபிவிருத்தி, பால் மற்றும் முட்டை தொடர்பான கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் டீ.பீ.ஹேரத் தெரிவித்துள்ளார்.

சந்தையில் காணப்படுகின்ற பால்மா தட்டுப்பாட்டுக்கு தீர்வாக பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அத்துடன் கொரோனாப் பரவல் காரணமாக நாடு பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் சர்வதேச சந்தைகளில் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் உள்ளூர் சந்தைகளில் பால்மாவுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது .

மேலும் இறக்குமதியில் காணப்படுகின்ற சிக்கல்களும் இதற்குக் காரணமாக அமைகின்றது.

இதனால் நாட்டில் திரவப் பால் உற்பத்தியை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கென கால்நடை வளர்ப்பாளர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 4
செய்திகள்இந்தியா

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது....

wo
செய்திகள்உலகம்

ஈரானின் நிலத்தடி ஏவுகணைத் தளங்கள்: போர்க்களத்தில் பலவீனமான புள்ளிகளாக மாறினவா?

ஈரான் தனது ஏவுகணைப் படைகளைப் பாதுகாப்பதற்காகப் பல ஆண்டுகளாக மலைகளுக்கு அடியில் அமைத்திருந்த பிரம்மாண்டமான ‘ஏவுகணை...

12 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் படகு கவிழ்ந்து விபத்து: இருவர் உயிரிழப்பு, தேடுதல் பணிகள் தீவிரம்!

யாழ்ப்பாணம், குருநகர் இறங்குதுறையில் இன்று (06.03.2026) காலை பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து...

14 5
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவிலும் 16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: மார்ச் 28 முதல் அமுல்!

இந்தோனேசியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் அதிரடித் தடை விதித்துள்ளது....