mil
இலங்கைசெய்திகள்

பால்மா தட்டுப்பாடு! – பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

Share

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பால்மா தட்டுப்பாட்டுக்கு தீர்வாக பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதனை கால்நடை, கமநல சேவை அபிவிருத்தி, பால் மற்றும் முட்டை தொடர்பான கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் டீ.பீ.ஹேரத் தெரிவித்துள்ளார்.

சந்தையில் காணப்படுகின்ற பால்மா தட்டுப்பாட்டுக்கு தீர்வாக பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அத்துடன் கொரோனாப் பரவல் காரணமாக நாடு பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் சர்வதேச சந்தைகளில் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் உள்ளூர் சந்தைகளில் பால்மாவுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது .

மேலும் இறக்குமதியில் காணப்படுகின்ற சிக்கல்களும் இதற்குக் காரணமாக அமைகின்றது.

இதனால் நாட்டில் திரவப் பால் உற்பத்தியை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கென கால்நடை வளர்ப்பாளர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
8 9
இலங்கைசெய்திகள்

இசைப்பிரியா – பாலச்சந்திரன் படுகொலை விவகாரம் : சட்ட நடவடிக்கைக்கு அஸ்திவாரம்!

இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரன் ஆகியோரின் மரணம் தொடர்பான முறைப்பாடு கொழும்பில் பொலிஸ் தலைமையகத்தில் உள்ள சட்டப்...

7 12
இலங்கைசெய்திகள்

ஷிரந்தியை காப்பாற்ற தேரர்களை நாடும் மகிந்த! போலி செய்தி தொடர்பில் வெளியான அறிக்கை

தனது மனைவி ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி தற்போதைய ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு அழுத்தம்...

6 17
இந்தியாசெய்திகள்

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் : வெளியான மற்றுமொரு தகவல்

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட தரவை புலனாய்வாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளதாக இந்திய சிவில்...

5 16
இலங்கைசெய்திகள்

அரசாங்க பாடசாலைகளில் பாட நேரங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

அரசாங்க பாடசாலைகளில் ஒரு பாடத்திற்கான கற்பித்தல் நேரத்தை 45 நிமிடங்களிலிருந்து 50 நிமிடங்களாக அதிகரிப்பது குறித்து...