6 28
இலங்கைசெய்திகள்

நாட்டில் சுகாதார நிபுணர்களின் இடப்பெயர்வு: உலக சுகாதார நிறுவனத்திடம் அறிவித்த இலங்கை

Share

சுகாதார நிபுணர்களின் இடம்பெயர்வு குறித்து, இலங்கையின் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, கவலையை வெளியிட்டுள்ளார்.

இது நாட்டின் சுகாதார அமைப்பு மற்றும் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதார சபையில் உரையாற்றும் போது அவர் இந்த விடயங்களை முன்வைத்துள்ளார்.

2022 மற்றும் 2025ஆம் ஆண்டுகளுக்கு இடையில், ஆயிரக்கணக்கான சுகாதார நிபுணர்கள் இலங்கையை விட்டு வெளியேறி, நாட்டின் சுகாதார அமைப்புக்கு கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

726 ஆலோசகர்கள், 1116 மருத்துவ அதிகாரிகள் மற்றும் 2800 செவிலியர் அதிகாரிகள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

இதன் காரணமாக, தமது சொந்த சுகாதார நிபுணர்களை உருவாக்க முதலீடு செய்த பின்னர், இலங்கை குறிப்பிடத்தக்க நிதி இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருப்பதாக நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், குறித்த சுகாதார நிபுணர்களை உள்வாங்கியுள்ள நாடுகளிடமிருந்து அதிக பொறுப்புக்கூரலை அமைச்சர் கோரியுள்ளார்.

அத்துடன், சர்வதேச சுகாதாரப் பணியாளர் ஆட்சேர்ப்பு குறித்த உலகளாவிய நடைமுறைக் குறியீட்டை, உலக சுகாதார நிறுவனம், திறம்பட செயற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...