6 28
இலங்கைசெய்திகள்

நாட்டில் சுகாதார நிபுணர்களின் இடப்பெயர்வு: உலக சுகாதார நிறுவனத்திடம் அறிவித்த இலங்கை

Share

சுகாதார நிபுணர்களின் இடம்பெயர்வு குறித்து, இலங்கையின் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, கவலையை வெளியிட்டுள்ளார்.

இது நாட்டின் சுகாதார அமைப்பு மற்றும் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதார சபையில் உரையாற்றும் போது அவர் இந்த விடயங்களை முன்வைத்துள்ளார்.

2022 மற்றும் 2025ஆம் ஆண்டுகளுக்கு இடையில், ஆயிரக்கணக்கான சுகாதார நிபுணர்கள் இலங்கையை விட்டு வெளியேறி, நாட்டின் சுகாதார அமைப்புக்கு கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

726 ஆலோசகர்கள், 1116 மருத்துவ அதிகாரிகள் மற்றும் 2800 செவிலியர் அதிகாரிகள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

இதன் காரணமாக, தமது சொந்த சுகாதார நிபுணர்களை உருவாக்க முதலீடு செய்த பின்னர், இலங்கை குறிப்பிடத்தக்க நிதி இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருப்பதாக நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், குறித்த சுகாதார நிபுணர்களை உள்வாங்கியுள்ள நாடுகளிடமிருந்து அதிக பொறுப்புக்கூரலை அமைச்சர் கோரியுள்ளார்.

அத்துடன், சர்வதேச சுகாதாரப் பணியாளர் ஆட்சேர்ப்பு குறித்த உலகளாவிய நடைமுறைக் குறியீட்டை, உலக சுகாதார நிறுவனம், திறம்பட செயற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...