17 19
இலங்கைசெய்திகள்

மெட்டா நிறுவனத்திலிருந்து ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம்

Share

மெட்டா நிறுவனத்திலிருந்து ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம்

மெட்டா (Meta) நிறுவனம் 3,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI வந்தபிறகு உலக முன்னனி நிறுவனங்கள் அதன் மீது ஆர்வம் காட்டி வருகின்றன.

இதனால், ஊழியர்களின் பணிக்கு அபாயம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை நடத்தும் மெட்டா நிறுவனரான மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) தமது நிறுவனத்தில் பணியாற்றும் 3,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளார்.

இதனடிப்படையில், குறித்த ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டு புதிய ஊழியர்களை பணியமர்த்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிறுவனத்தின் கொள்கைகளை சீரமைக்கும் ஒருபணி நடைபெற்று வருகின்றது.

குறைந்த செயல்திறன் கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்ட சுமார் 3,600 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளனர்.

அதாவது, ஐந்து சதவீதம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு போதிய இழப்பீடும் வழங்கப்படும்.

ஒரு வருடத்தில் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாதவர்களை நாங்கள் பொதுவாக நிர்வகிக்கிறோம்.

செப்டம்பர் மாத நிலவரப்படி மெட்டாவில் மொத்தம் சுமார் 72,400 பணியாளர்கள் உள்ளனர், இதில் 3,600 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...