17 19
இலங்கைசெய்திகள்

மெட்டா நிறுவனத்திலிருந்து ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம்

Share

மெட்டா நிறுவனத்திலிருந்து ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம்

மெட்டா (Meta) நிறுவனம் 3,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI வந்தபிறகு உலக முன்னனி நிறுவனங்கள் அதன் மீது ஆர்வம் காட்டி வருகின்றன.

இதனால், ஊழியர்களின் பணிக்கு அபாயம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை நடத்தும் மெட்டா நிறுவனரான மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) தமது நிறுவனத்தில் பணியாற்றும் 3,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளார்.

இதனடிப்படையில், குறித்த ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டு புதிய ஊழியர்களை பணியமர்த்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிறுவனத்தின் கொள்கைகளை சீரமைக்கும் ஒருபணி நடைபெற்று வருகின்றது.

குறைந்த செயல்திறன் கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்ட சுமார் 3,600 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளனர்.

அதாவது, ஐந்து சதவீதம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு போதிய இழப்பீடும் வழங்கப்படும்.

ஒரு வருடத்தில் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாதவர்களை நாங்கள் பொதுவாக நிர்வகிக்கிறோம்.

செப்டம்பர் மாத நிலவரப்படி மெட்டாவில் மொத்தம் சுமார் 72,400 பணியாளர்கள் உள்ளனர், இதில் 3,600 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 6 2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புதிய சகாப்தம்: கடவுச்சீட்டு சோதனை இல்லை, நீண்ட வரிசை இல்லை! – AI மூலம் விமான நிலையங்களில் முக ஸ்கேன் அனுமதி!

பிரித்தானியா, தனது விமான நிலையம் ஒன்றில், நவீன தொழில்நுட்பம் மூலம் கடவுச்சீட்டு சோதனை இல்லாமலே பயணிகளை...

skynews donald trump benjamin netanyahu 7080062
செய்திகள்உலகம்

ஊழல் வழக்கில் நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும்: ட்ரம்ப் கடிதத்துக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு!

ஊழல் வழக்குகளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக்...

articles2FgwJ5r85aOgQuM4EhGVg6
அரசியல்இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டவே: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுப்போம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு...

25 6915d20fc755f
செய்திகள்அரசியல்இலங்கை

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மட்டுமே; சட்டத்தின் முன் அனைவரும் சமமே”: கார்த்திகை வீரர்கள் தினத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மாத்திரமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நடைபெற்ற கார்த்திகை வீரர்கள்...