13 5
இலங்கைசெய்திகள்

அதிரடியாக சீல் வைக்கப்பட்ட மதுபான உற்பத்தி ஆலை: அரசாங்கத்தின் திடீர் நகர்வு

Share

அதிரடியாக சீல் வைக்கப்பட்ட மதுபான உற்பத்தி ஆலை: அரசாங்கத்தின் திடீர் நகர்வு

டபிள்யூ. எம். நாகொட, வெலிசறையில் உள்ள மெண்டிஸ் & கம்பனியின் மதுபான உற்பத்தி ஆலைக்கு இன்று (5) சீல் வைக்கப்பட்டுள்ளது.

சட்ட விதிகளின்படி, மெண்டிஸ் நிறுவனம் மதுவரி மற்றும் அதனுடன் தொடர்புடைய 3% மேலதிகக் கட்டணமான 5.7 பில்லியன் ரூபாவையும் செலுத்த தவறியதன் காரணமாக நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமத்தை இன்று (5) முதல் இடைநிறுத்துமாறு மதுவரி ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரவின்படி, மதுவரி திணைக்களம் மற்றும் கம்பஹாவைச் சேர்ந்த மதுவரி அத்தியட்சகர்கள் மற்றும் அதிகாரிகள் குழு குறித்த சீல் வைக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

ஆறு மணி நேரத்துக்கும் மேலான கண்காணிப்புக்குப் பிறகு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜாஎல மற்றும் கம்பஹா மதுவரி அத்தியட்சகர்கள, இன்று முதல் டபிள்யூ. எம். மெண்டிஸ் மற்றும் கம்பெனியின் அனைத்து உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கைகளும் சாத்தியமில்லை என தெரிவித்துள்ளனர்.

வரி செலுத்தத் தவறிய மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமத்தை கடந்த நவம்பர் 30ஆம் திகதி முதல் இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் விஞ்ஞாபன முடிவொன்றை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
wether
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் நாடு முழுவதும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

இலங்கையினை பொறுத்தவரை இன்று பகல் வேளையில் மனித உடலினால் உணரக்கூடிய எச்சரிக்கை மட்டத்தில் அதிகரித்த வெப்பநிலை...

Pastor Jerome
இலங்கை

அநுரவை புகழ்ந்த சர்ச்சையில் சிக்கிய போதகர்.

மிராக்கல் டோம் தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வொன்றின் போது, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்த, ஜெரோம் பெர்னாண்டோ...

man death body
இலங்கை

பூட்டிய வீட்டிற்குள் ஆண் ஒருவரின் சடலம் – யாழில் சம்பவம்.

  யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசியதாக...

police shooting
இலங்கை

காவல்துறையினர்மீது தாக்குதல் முயற்சி – ஒருவர் மருத்துவமனையில் அனுமதி,

பிலியந்தலை, வீரசிங்க மாவத்தை பகுதியில் இன்று காலை சந்தேகத்திற்கிடமான இருவரை சோதனையிட முற்பட்ட போது பொலிஸாரால்...