2 3
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனா எம்.பிக்கு எதிரான வழக்கு: நீதிமன்றத்தின் உத்தரவு

Share

அநுராதபுர போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது மே 28ஆம் திகதி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யுமாறு அநுராதபுரம் தலைமை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அநுராதபுரம் காவல்துறை தலைமையக பிரதான பரிசோதகருக்கு குறித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (03) மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரம் வழியாக கொழும்புக்கு காரில் பயணித்தபோது சாலியபுர கல்வல சந்தியில் அநுராதபுரம் பிரிவு போக்குவரத்து பிரிவு அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும், குற்றவியல் பலத்தைப் பயன்படுத்தி மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் சந்தேகநபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து அனுராதபுரம் காவல்துறையினர் நீதிமன்றத்தில் முறைப்பாடு அளித்ததை அறிந்ததும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சட்டத்தரணி சுனந்த தென்னகோன் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையாகி ஒரு பிரேரணையை முன்வைத்திருந்தார்.

இதனை தொடர்ந்து, வழக்கில் சந்தேகநபரின் பெயர் அர்ச்சுன லோச்சன என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டமையடுத்து, சரியான சந்தேகநபரை அடையாளங்கண்டு அறிவிக்குமாறு நீதிமன்று காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தது.

பின்னர், மேலும் ஒரு அறிக்கையின் மூலம், அநுராதபுரம் காவல்துறை தலைமையகம் வழக்கில் சரியான சந்தேக நபரின் பெயரை இராமநாதன் அர்ச்சுனா என்று திருத்தி, நீதிமன்றத்திற்கு உண்மைகளை அறிவித்தது.

அதன்படி, சம்பந்தப்பட்ட வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை சந்தேக நபராக நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...