சபாநாயகர் தலைமையில் நாளை கட்சித் தலைவர்கள் கூட்டம்!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன

நாடாளுமன்றம் எதிர்வரும் 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடவுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான குழுவின் கூட்டம் நாளை முற்பகல் 9.30 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றத்தில் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களது உணவு விவகாரம் தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும்.

நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் உணவு தமக்குத் தேவையில்லை, வெளியில் இருந்து கொண்டுவந்து உண்பதற்கு அனுமதிக்குமாறு எம்.பிக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version