விபத்துக்களை ஏற்படுத்தும் சாரதிகளுக்கு புதிய திட்டம்
இலங்கைசெய்திகள்

விபத்துக்களை ஏற்படுத்தும் சாரதிகளுக்கு புதிய திட்டம்

Share

விபத்துக்களை ஏற்படுத்தும் சாரதிகளுக்கு புதிய திட்டம்

உயிரிழக்கும் விபத்துக்களை ஏற்படுத்தும் வாகனங்களின் சாரதிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ விளக்கமளிக்கின்றார்.

“தற்போது வாகன சாரதிகள், மதுபானம் மட்டுமின்றி போதைப்பொருட்களும் உட்கொண்டு வாகனங்களைச் செலுத்துகின்றனர்.

எதிர்காலத்தில், இதனை அடையாளம் காணும் வகையில் தேவையான உபகரணங்கள் உதவியுடன் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படும்.

மேலும், எதிர்காலத்தில், வீதி விபத்து ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட சாரதிகள், மது, போதைப்பொருள் உட்கொண்டாரா என, மருத்துவரிடம் முன்னிலைப்படுத்தப்படுவர்.

இது தொடர்பில் போக்குவரத்துப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்த கலந்துரையாடல்களை ஆரம்பித்து நடைமுறைப்படுத்துவார்.

மேலும் உருவாக்கப்பட வேண்டிய பல திட்டங்கள் தற்போது ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...