மே தினப் பேரணிகள்
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நாடெங்கும் மே தினப் பேரணிகள்!

Share

மே தினத்தையொட்டி பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் நாட்டின் பல பகுதிகளில் கூட்டங்கள் மற்றும் பேரணிகள் என்பவற்றை ஏற்பாடு செய்துள்ளன.

இதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டம் இன்று பிற்பகல் 2 மணியளவில் நுகேகொடை ஆனந்த சமரகோன் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக்கூட்டம் இந்த முறை சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

கடந்த 26ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி கண்டியில் ஆரம்பித்த பேரணி இன்று நிறைவடையவுள்ளது.

குறித்த பேரணி சுதந்திர சதுக்க வளாகத்தை சென்றடையவுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சியின் மே தினக் கூட்டம் இன்று முற்பகல் 10 மணியளவில் கொழும்பிலுள்ள பிரதான கட்சி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் புதிய நகர மண்டப வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

அத்துடன் ஜே.வி.பி. இன்று 4 இடங்களில் மே தினக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. அதன் பிரதான மே தின ஊர்வலம் இன்று பிற்பகல் மாளிகாவத்தை பீ.டி.சிறிசேன விளையாட்டரங்கில் ஆரம்பமாகி பிற்பகல் 3 மணியளவில் கொழும்பு – கோட்டையை வந்தடையவுள்ளது.

இது தவிர, யாழ்ப்பாணம், அநுராதபுரம் மற்றும் மாத்தறை ஆகிய இடங்களிலும் ஜே.வி.பியின் மே தினக் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன.

இதேவேளை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டம் கொட்டகலை சி.எல்.எப். வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

இதற்காகக் கட்சியின் தோட்டத் தலைவர்கள், தலைவிகள் மற்றும் அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி என்பன அந்தந்தத் தோட்டங்களிலும் பிரதேசங்களிலும் மே தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான மே தினக் கூட்டம் இன்று கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது.

இது தவிர நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல ஆர்ப்பாட்டங்களும் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...