5 39
இலங்கைசெய்திகள்

சாணக்கியனை நிராகரித்த மாவை! பல வருடங்கள் கழித்து வழங்கிய பதிலடி

Share

சாணக்கியனை நிராகரித்த மாவை! பல வருடங்கள் கழித்து வழங்கிய பதிலடி

கடந்த 2015ஆம் ஆண்டு மாவை சேனாதிராஜாவை (Mavai Senathirajah) சந்தித்தபோது அவர் தன்னைக் கட்சியில் சேர்க்க முடியாது என்று கூறியதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் (R.Shanakiyan) தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ”2015ஆம் ஆண்டு மாவை சேனாதிராஜாவை சந்தித்தபோது அவர் என்னைக் கட்சியில் சேர்க்க முடியாது என்று கூறினார்.

இந்நிலையில், 2016ஆம் ஆண்டு சம்பந்தன் தான் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துரைராஜசிங்கத்தை சந்திக்கும் படி என்னை அறிவுறுத்தினார். இப்படியாகத்தான் நான் கட்சிக்குள் வந்தேன்.

தற்போது கட்சியில் இருந்து பதவி விலகிய தலைவர், பதவி ஆசையில் இருக்கின்றார் என்பதற்காக எம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

சிலர் மாவை சேனாதிராஜாவை வளர்த்த கிடா அவரது மார்பில் பாய்ந்தது என்று எழுதியிருந்தார்கள். அவர் என்னை வளர்க்கவுமில்லை, நான் அவருக்கு எதிராகப் பாயவும் இல்லை.

கடந்த 14ஆம் திகதி வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டமானது சகல கதவுகளும் மூடப்பட்ட அறையில் தான் நடைபெற்றது.

இருப்பினும், மாவை சேனாதிராஜாவின் வருகையின் போது கதவு திறக்கப்பட்டது. அந்த வேளையில் பேசப்பட்ட விடயங்கள் மாத்திரமே வெளியே நின்ற ஊடகவியலாளர்களுக்கு கேட்டது. அவை செய்திகளாகப் பிரசுரிக்கப்பட்டிருந்தன.

எனினும், அன்றைய தினம் காலை 10 மணிக்கு ஆரம்பமான கூட்டத்திற்கு கொழும்பு, அம்பாறை, திருக்கோயில் உள்ளிட்ட தொலைதூர இடங்களில் இருந்து அதிகாலை 4 மணிக்குப் புறப்பட்ட உறுப்பினர்கள் 10 மணிக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தார்கள்.

ஆனால், தலைவர் மாவை சேனாதிராஜா வரவில்லை. அது வழமையாக நடப்பது தான். நாங்கள் எல்லோரும் அவர் வரும் வரை காத்திருக்க வேண்டும்.

எனவே, இம்முறை மிகத் தாமதமானதால் கூட்டத்தை ஆரம்பிக்குமாறு நான் கூறினேன். அதற்கு சிவமோகனால் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

அந்தக் கூட்டத்தில் கட்சியின் சரிவை சீரமைப்பது, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கு எவ்வாறு முகங்கொடுக்கப் போகின்றோம் என்பது பற்றிப் பேச வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாக இருந்தது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...