2 26
உலகம்செய்திகள்

பிரேசிலில் ஏற்பட்ட விமான விபத்து: தொழிலதிபர் உட்பட்ட குடும்ப உறுப்பினர்கள் பலி

Share

பிரேசிலில் ஏற்பட்ட விமான விபத்து: தொழிலதிபர் உட்பட்ட குடும்ப உறுப்பினர்கள் பலி

பிரேசிலிய(Brazil) சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான ஒரு நகரத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயங்களுக்கு உள்ளாகினர்.

பிரேசிலின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.

குறித்த விமானம் தொலைபேசி நிறுவனம் ஒன்றின் மீது மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

விபத்துக்குள்ளான விமானம், பிரேசிலிய தொழிலதிபர் லூயிஸ் கிளாடியோ கலியாஸியாவின் விமானம் என்றும்,அவர் தனது குடும்பத்தினருடன் சாவோ பாலோ மாநிலத்திற்குப் பயணம் செய்து கொண்டிருந்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 61 வயதான தொழிலதிபர் அவரது மனைவி மூன்று மகள்மார் உட்பட்டவர்கள் பலியாகினர்.

Share
தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...