1 2
இலங்கைசெய்திகள்

முட்டையின் விலை வேகமாக உயரும் அபாயம்: விலைகளில் பெரும் மோசடி

Share

முட்டையின் விலை வேகமாக உயரும் அபாயம்: விலைகளில் பெரும் மோசடி

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலை வேகமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இம்மாதம் நடுப்பகுதியில் மீண்டும் முட்டை விலையை உயர்த்த கோழிப்பண்ணை உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நாட்களில் சில்லரை விலையில் ஒரு முட்டை 35 ரூபாய் முதல் 37 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

இருப்பினும், கோழிப்பண்ணைகளில் 28 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையிலான விலையில் வாங்கப்படும் முட்டை, சில்லறை வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்களால் அதிக விலைக்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு முட்டையின் உற்பத்திச் செலவு 34 ரூபாயாக உயர்ந்துள்ளதால், முட்டை விற்பனையில் உற்பத்திச் செலவைக் கூட ஈடுகட்ட முடியாமல் பண்ணை உரிமையாளர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கோழித் தீவனமாக வழங்கப்படும் ஒரு கிலோ வெள்ளை அரிசியின் விலை 80 ரூபாவாக இருந்ததாகவும், தற்போது அரிசி ஆலைகளில் அரிசி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் ஒரு கிலோ வெள்ளை அரிசி 140 ரூபாவாக அதிகரித்துள்ளது.

மேலும்,140 ரூபாவாக இருந்த ஒரு கிலோ சோளத்தின் விலையும் 170 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கோழி தீவனத்தின் விலை உயர்வு மற்றும் முட்டை விலை குறைப்பினால் தங்களின் வருமானம் சரிந்துள்ளதாக சிறு மற்றும் நடுத்தர கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலை வேகமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், பின்னணியில் பெரிய அளவிலான கோழிப்பண்ணை உரிமையாளர்கள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...