24 663d73cb04440
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதி தொடர்பில் இறக்குமதியாளர் சங்கம் அறிவிப்பு

Share

வாகன இறக்குமதி தொடர்பில் இறக்குமதியாளர் சங்கம் அறிவிப்பு

உடனடி வாகன இறக்குமதி தொடர்பான வதந்திகளை இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம் மறுத்துள்ளது.

அந்த வகையில் இலகுரக வாகனங்கள் உட்பட எந்தவொரு வாகனமும் நடப்பு வருடத்திலோ அல்லது தேர்தலுக்கு முன்னதாகவோ இறக்குமதி செய்யப்படாது என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சங்கத்தலைவர் பிரசாத் பிரியங்க தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடலின் படி, வாகன இறக்குமதிக்கு குறைந்தது இன்னும் ஒரு வருடமாவது ஆகும். இருப்பினும், இறக்குமதியை மீண்டும் தொடங்கும் போது, பேருந்துகள் மற்றும் பாரவூர்திகள் முதன்மையாக சுற்றுலா நோக்கங்களுக்காக இறக்குமதி செய்யப்படும் முதல் தொகுதியாக இருக்கும் என்று பிரியங்க கூறியுள்ளார்.

பேருந்துகள், மற்றும் பாரவூர்திகள்; என்பன தமது சங்கத்தின் உறுப்பினர்கள் மூலம் பிரத்தியேகமாக இறக்குமதி செய்யப்படும்.

இதன்போது அதிகபட்ச இறக்குமதி காலம் ஒரு மாதமாக இருக்கும். மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும் எனினும் எரிபொருளில் இயங்கும் வாகனங்களும் அவற்றில் சேர்க்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

வாகனங்களை இறக்குமதி செய்யும் போது இறக்குமதியாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரியை 18வீதமாக குறைப்பது தொடர்பாகவும் இராஜாங்க அமைச்சருடன் கலந்துரையாடப்பட்டது என்றும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்க தலைவர் பிரசாத் பிரியங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...