24 663d73cb04440
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதி தொடர்பில் இறக்குமதியாளர் சங்கம் அறிவிப்பு

Share

வாகன இறக்குமதி தொடர்பில் இறக்குமதியாளர் சங்கம் அறிவிப்பு

உடனடி வாகன இறக்குமதி தொடர்பான வதந்திகளை இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம் மறுத்துள்ளது.

அந்த வகையில் இலகுரக வாகனங்கள் உட்பட எந்தவொரு வாகனமும் நடப்பு வருடத்திலோ அல்லது தேர்தலுக்கு முன்னதாகவோ இறக்குமதி செய்யப்படாது என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சங்கத்தலைவர் பிரசாத் பிரியங்க தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடலின் படி, வாகன இறக்குமதிக்கு குறைந்தது இன்னும் ஒரு வருடமாவது ஆகும். இருப்பினும், இறக்குமதியை மீண்டும் தொடங்கும் போது, பேருந்துகள் மற்றும் பாரவூர்திகள் முதன்மையாக சுற்றுலா நோக்கங்களுக்காக இறக்குமதி செய்யப்படும் முதல் தொகுதியாக இருக்கும் என்று பிரியங்க கூறியுள்ளார்.

பேருந்துகள், மற்றும் பாரவூர்திகள்; என்பன தமது சங்கத்தின் உறுப்பினர்கள் மூலம் பிரத்தியேகமாக இறக்குமதி செய்யப்படும்.

இதன்போது அதிகபட்ச இறக்குமதி காலம் ஒரு மாதமாக இருக்கும். மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும் எனினும் எரிபொருளில் இயங்கும் வாகனங்களும் அவற்றில் சேர்க்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

வாகனங்களை இறக்குமதி செய்யும் போது இறக்குமதியாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரியை 18வீதமாக குறைப்பது தொடர்பாகவும் இராஜாங்க அமைச்சருடன் கலந்துரையாடப்பட்டது என்றும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்க தலைவர் பிரசாத் பிரியங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
codf 1671799699
உலகம்செய்திகள்

16 ஆண்டுகால திருமண பந்தம் முறிவு: முடி கொட்டியதால் மனைவியை கைவிட்ட கணவன் – சீனாவில் ஒரு சோகம்!

சீனாவில் 16 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தனது மனைவிக்கு ஏற்பட்ட சரும நோயால் முடி கொட்டியதைக்...

tjv16cjg mohsin naqvi shahbaz sharif 625x300 26 January 26
செய்திகள்விளையாட்டு

T20 உலகக்கிண்ணம் 2026: பாகிஸ்தான் பங்கேற்பதில் சிக்கல்? பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் இன்று அவசரச் சந்திப்பு!

இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது...

images 9 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புற்றுநோய் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு: சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்து குறித்து CID-யில் முறைப்பாடு!

நாட்டின் புற்றுநோய் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் வெளிச்சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்துகள் தொடர்பாக...

DxCjISGeXs
இந்தியாசெய்திகள்

ஆசியாவில் நிபா வைரஸ் அச்சம்: முக்கிய வானூர்தி நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம் – 75% உயிரிழப்பு விகிதம் கொண்ட உயிர்கொல்லி!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா (Nipah) வைரஸ் தொற்றுப் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து,...