முல்லைத்தீவில் போதைப்பொருள் கடத்தல்: திருமணமான தம்பதியர் உட்பட ஐவர், ஐஸ் மற்றும் வாள்களுடன் கைது!

25 69405094615b9

முல்லைத்தீவு மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட திருமணமான தம்பதியர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களிடமிருந்து இரண்டு வாள்கள் மற்றும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் முல்லைத்தீவு, மூங்கிலாறு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர்கள், போதைப்பொருள் மற்றும் இரண்டு வாள்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் சிறிது காலமாக அந்தப் பகுதியில் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களை விநியோகித்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள ஐஸ், இரண்டு வாள்கள் மற்றும் ரூ.61,000 பணத்துடன் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர்

Exit mobile version