tamilnaadi 66 scaled
இலங்கைசெய்திகள்

ஒரு வருடகாலமாக இருளில் மூழ்கியுள்ள கிராமங்கள்

Share

அநுராதபுரம் மாவட்டத்தின் பல கிராமங்கள், மின் துண்டிப்பு காரணமாக இருளில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அநுராதபுரம் மாவட்டத்தின் மஹவிலச்சிய பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தந்திரிமலை, இஹல கோனவெவ, குடாகம, தம்பியாவ. நிகவெவ, தங்கஸ்வெவ போன்ற கிராமங்களே இவ்வாறு இருளில் மூழ்கியுள்ளன.

இங்குள்ள மக்கள் மிகவும் குறைந்த வருமானத்தைக் கொண்டுள்ளதுடன், நாளொன்றுக்கு ஒரு தடவை மாத்திரமே உணவு உட்கொள்ளக்கூடிய அளவுக்கு மிகவும் ஏழைகளாக உள்ளனர்.

அதன் காரணமாக அவர்களால் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலையில் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக மேற்குறித்த கிராமத்தின் ஒட்டுமொத்த வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மின்சாரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள வழியற்ற குறித்த கிராம மக்கள் குப்பி விளக்கு வௌிச்சத்தின் உதவியுடன் கடந்த ஒரு வருடகாலமாக இரவுகளைக் கழித்துக் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...