19
இலங்கைசெய்திகள்

இலங்கையின் உயிர் மாய்ப்பு தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்கள்!அதிகரித்துள்ள மனநலம் பாதிப்பு

Share

இலங்கையில் வருடத்தில் மூவாயிரத்து இருநூறு (3200) பேர் மனநலப் பிரச்சினைகள் காரணமாக உயிர் மாய்ப்பு செய்து கொள்கிறார்கள் என அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது.

மேலும் வருடத்திற்கு 80 மாணவர்கள் உயிர் மாய்ப்பு செய்துக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அங்கொடை தேசிய மனநல நிறுவனத்தின் மனநோய்களுக்கான நிபுணர் வெளியிட்டுள்ள தகவலின்படி,

”நாட்டில் உயிர் மாய்ப்பு வீதம் அதிகரிப்பு இல்லையானாலும், உயிர் மாய்ப்பு பட்டியலில் இலங்கை 21வது இடத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்கையின் உயிர் மாய்ப்பு தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்கள்!அதிகரித்துள்ள மனநலம் பாதிப்பு | Many Shocking Reports About Suicide In Sri Lanka

பொருளாதார நெருக்கடி காரணமாக உயிர் மாய்ப்பு அதிகரிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

மனநலப் பிரச்சினை ஏற்பட்டால், அங்கொடா தேசிய மனநல நிறுவனத்தின் 24 மணி நேர தொலைபேசி சேவையான 1926 ஐ அழைத்து ஆலோசனை பெறலாம் என்றும், இந்த அழைப்பிற்கு கட்டணம் அறவிடப்படுவதில்லை என்றும் அவர் கூறினார்.

பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை நாள் முழுவதும் கையடக்க தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகளுக்கு அடிமையாகியுள்ளதால், இதுவும் ஒரு மனநோய் என்றே அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நாட்டில் 15 முதல் 20 சதவீத மக்கள் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சோகம், பாலியல் ஈடுபாடு குறைதல், தூக்கமின்மை, பசியின்மை, எரிச்சல் மற்றும் நடத்தை வேறுபாடுகள் இதற்கு காரணமாக குறிப்பிடப்படுகின்றன.

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளனர். ஐஸ், கஞ்சா மற்றும் ஹெரோயின் போதை காரணமாக மனநோய்கள் ஏற்படலாம். மற்றொரு மனநோய் டிமென்ஷியா. அதாவது, மறதி ஆகும்.

அங்கொடை மருத்துவமனையில் சுமார் 500 மனநோயாளிகள் குணமடைந்துள்ளனர். ஆனால் அவர்களது உறவினர்கள் அவர்களை அழைத்துச் செல்வதில்லை.

நோயாளர்களின் உறவினர்களின் முகவரிகளை சரிபார்த்தால், அந்த முகவரிகளில் அவர்கள் இல்லை. இந்த நோயாளிகள் 30-40 வருடங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்கள் குணமடைந்தாலும், அவர்களது குடும்பங்களின் நிதிப் பிரச்சினைகள் காரணமாக யாரும் அவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லத் தயாரில்லை” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...