18
இலங்கைசெய்திகள்

குழந்தைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

Share

மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு வேதிப்பொருளான டோபமைனின் (Dopamine) வெளியிடுதல் தாமதமாகும் போது குழந்தைகள் கையடக்க தொலைபேசிகளில் செலவிடும் நேரம் அதிகரிக்கிறது, அதனால் குழந்தைகள் அதற்கு அடிமையாவது அதிகமாகிறது என்று அங்கொடை தேசிய மனநல நிறுவனத்தின் குழந்தை மற்றும் இளம் பருவ மனநல மருத்துவரான சேனானி விஜேதுங்க தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் கையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையாவதற்கான மருத்துவ காரணம் குறித்து தெளிவுபடுத்தும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: குழந்தைகள் தொலைபேசியை பாவிப்பதன் மூலம் மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள்.

மகிழ்ச்சியை ஏற்படுத்தும் இரசாயனம் டோபமைன், ஆரம்ப நாட்களில் தொலைபேசியை பாவிக்கும் மிகக் குறுகிய நேரத்திற்குள் வெளியிடப்படும் போது குழந்தை மகிழ்ச்சியடைகிறது.

பின்னர் குழந்தைகள் தொலைபேசியை வைத்து விடுகிறார்கள். ஆனால் நேரம் செல்ல செல்ல, டோபமைன் வெளியிட எடுக்கும் நேரம் அதிகரிக்கிறது.

உதாரணமாக, ஆரம்ப நாட்களில் டோபமைன் அரை மணி நேரம் வெளியிடப்பட்டால், பின்னர் வெளியிட ஒரு மணி நேரம் ஆகும்.

பின்னர் குழந்தை சுமார் ஒரு மணி நேரம் தொலைபேசியை கீழே வைக்காது. அதிக நேரம் டோபமைன் வெளியிட இரண்டு, மூன்று அல்லது நான்கு மணிநேரம் கூட ஆகலாம்.

குழந்தை சுமார் நான்கு மணி நேரம் தொலைபேசியை கீழே வைக்க மாட்டார்கள்.

ஒரு குழந்தை தொலைபேசிக்கு அடிமையாகி இருப்பதை நாம் இப்படித்தான் பார்க்கிறோம்.

எனவே, குழந்தைகள் தொலைபேசியை அதிகமாகப் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். பெற்றோர்கள் அதை மேற்பார்வையிட வேண்டும்.

குழந்தைகள் அறைகளிலிருந்து தொலைபேசியைப் பாவிக்க அனுமதிக்காதீர்கள். குழந்தைகள் வீடியோ கேம்களில் கவனம் செலுத்த விடாதீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...