24 66893e09b964c
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டு மக்களை ஏமாற்றும் எதிர்கட்சியினர்: மனுஷ எம்.பி குற்றச்சாட்டு

Share

நாட்டு மக்களை ஏமாற்றும் எதிர்கட்சியினர்: மனுஷ எம்.பி குற்றச்சாட்டு

இலங்கை வங்குரோத்து நிலையை எதிர்கொண்டு எந்த நாட்டிடமும் கடன் பெறவில்லை என்பதை தெரிந்திருந்தும் நாட்டின் கடன் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் மக்களை ஏமாற்றி வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

காலி – ஹக்மன டெனி அபேவிக்ரம விளையாட்டரங்கில் நேற்றுநடைபெற்ற ‘ஜயகமு ஸ்ரீலங்கா’ மக்கள் நடமாடும் சேவை நிகழ்வில் இதனை தெரிவித்துள்ளார் கூறியுள்ளார்.

 

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

 

“நாங்கள் வங்குரோத்து அடைந்த பிறகு எந்த நாட்டிலிருந்தும் கடன் பெறவில்லை இருப்பினும், சில அரசியல்வாதிகள் கடன் அதிகரித்துள்ளதாக பகிரங்கமாக தெரிவிக்கின்றனர் .

 

எங்கள் கடன்கள் டொலர்களில் கூறப்படும்போது கடன் ஏற்ற இறக்கமாக இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் இவ்வாறு பொய் பிரச்சாரங்களை செய்து மக்களை தவறாக வழிநடத்துகின்றனர்.

 

ஊட்டச்சத்து குறைபாடு நல்லதா கெட்டதா என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டார். இந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படக்கூடாது என்பதற்காக குழந்தைகளின் பெற்றோர் வெளிநாடு சென்று பணம் அனுப்புகின்றனர்.

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்த குழந்தைகளை நேசிப்பதால் ஆறுதல் மற்றும் சோறு கொடுக்கிறார். நாட்டின் துரதிர்ஷ்டங்களை மாற்றி நல்லவர்களாக மாற்ற முயற்சிக்கிறோம்.

 

எமது பிள்ளைகளின் பெற்றோர் வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பிய போது, ராஜபக்சர்கள் திருடுவார்கள் அனுப்ப வேண்டாம் என ஜேவிபியினர் கூறினார்கள் . ஆனால் அப்பெற்றோர்கள் அதை நம்பாமல் தங்கள் பிள்ளைகள் மற்றும் நாட்டின் மீதுள்ள அன்பினால் 12 பில்லியன் டொலர்ககளை இந்த நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

அதனால்தான் இந்நாட்டு மக்கள் மீண்டும் உணவும் பானமும் பெற முடிந்தது” என்றார்.

Share
தொடர்புடையது
Untitled 45
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடி: இலங்கையில் மின்சாரக் கட்டுப்பாடுகள் மற்றும் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவும் மோதலால் ஏற்பட்ட உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், இலங்கை முழுவதும் எரிபொருள்...

Untitled 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வு 2026: விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில்...

Untitled 43
உலகம்செய்திகள்

சர்வதேச எரிபொருள் நெருக்கடி: பிரிட்டனில் வரலாறு காணாத விலை உயர்வு!

ஐக்கிய ராச்சியத்தில் டீசல் விலை 2022 டிசம்பருக்குப் பிறகு இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது, அதே நேரத்தில்...

Untitled 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிராமப்புற வலுவூட்டலுக்கான ‘பிரஜசக்தி’ திட்டம்: ஜனாதிபதி செயலகத்தில் விசேட ஆய்வு!

சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதையும், சமூகத்தில் பொருளாதாரப் பலன்கள் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு...