25 693d97d6633db
அரசியல்இலங்கைசெய்திகள்

மலையகப் பெருந்தோட்ட அனர்த்த நிவாரணப் பணிகள்: நிரந்தர தீர்வு முன்னெடுப்புக்கு ஜனாதிபதியுடன் சந்திப்பு தேவை – மனோ கணேசன்!

Share

சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தில், கண்டி, நுவரெலியா, பதுளை, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் வாழும் மலையகப் பெருந்தோட்டச் சமூகம் விசேட சவால்களை எதிர்கொள்வது தெளிவாகத் தெரிகிறது என்றும், இதில் பாதுகாப்பான காணி மற்றும் வீடுகள் முன்னுரிமை வகிக்கின்றன என்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மனோ கணேசன் நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதம் தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஊடகச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வரும் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன:

அரசின் நிவாரண மற்றும் புனரமைத்தல் செயல்முறைகள் தொடர்பில் ஜனாதிபதியின் தலைமைத்துவத்தை மனோ கணேசன் பாராட்டியுள்ளார்.

இந்த நிவாரண மற்றும் நிரந்தரத் தீர்வு முன்னெடுப்புகளில், பெருந்தோட்ட மக்களுக்கு உரிய இடத்தைப் பெறுவதற்கும், அரசுக்கு அவசியமான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கும், மலையக அரசியல் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி நேரம் ஒதுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் விசேட சவால்கள் மற்றும் அதன் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து நேரில் சந்தித்துக் கலந்துரையாடவே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
ampitiya therar
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழர்களுக்கு எதிரான வன்முறைக் கருத்து: அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்குப் பிடிவிறாந்து, பயணத்தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களையும், தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும்’ என...

24 6719ef7b673a7
அரசியல்செய்திகள்

டயானா கமகே கடவுச்சீட்டு விசா வழக்கு: மேலதிக சாட்சியங்களுக்காக பிப். 16க்கு ஒத்திவைப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீது கடவுச்சீட்டு மற்றும் விசாக்கள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத்...

Waqf Board Donates Rs 10 Million 1170x658 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தில் சேதமடைந்த மதத் தலங்களைப் புனரமைக்க: வக்ஃப் சபை 10 மில்லியன் நிதி நன்கொடை!

கடந்த காலத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த மதஸ்தலங்களை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளுக்காக, வக்ஃப் சபையினால்...

Untitled
அரசியல்இலங்கைசெய்திகள்

கிராம உத்தியோகத்தர்களுக்கு எதிரான பொதுவான குற்றச்சாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும் – இம்ரான் மகரூப் கோரிக்கை!

நாட்டிலுள்ள ஒட்டுமொத்த கிராம உத்தியோகத்தர்களுக்கும் மனஅழுத்தம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும்,...