24 6639812758f25
இலங்கைசெய்திகள்

பலத்த பாதுகாப்புடன் டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்படும் பாதாள உலகக்கும்பல் தலைவர்

Share

பலத்த பாதுகாப்புடன் டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்படும் பாதாள உலகக்கும்பல் தலைவர்

டுபாயில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நாட்டின் முன்னணி பாதாள உலகக் கும்பல் தலைவர்களில் ஒருவராகவும் போதைப்பொருள் வியாபாரியாகவும் கருதப்படும் மன்னா ரமேஷ் மற்றும் அவரது சீடர்கள் மூவரும் இன்று (7) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

இந்த நான்கு பாதாள உலக நபர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் குழுவொன்று நேற்று டுபாய் சென்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இரகசியப் பொலிஸாருக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் நடவடிக்கையின் கீழ் விசேட இரகசிய பொலிஸ் குழு டுபாய் நோக்கிப் புறப்பட்டுள்ளது.

பாதாள உலகக் குழுத் தலைவனாகக் கருதப்படும் மன்னா ரமேஷ் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் காரில் பயணித்தபோது உள்ளூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து அவரது சீடர்கள் மூவரையும் உள்ளூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிவப்பு அறிவிப்பு அனுப்பப்பட்ட நாற்பத்து மூன்று பேர் பட்டியலில் மன்னா ரமேஷும் இருப்பதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...