rtjy 263 scaled
இந்தியாஇலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகள் விவகாரம்: இந்திய தேசிய புலனாய்வால் மற்றொருவர் கைது

Share

விடுதலைப் புலிகள் விவகாரம்: இந்திய தேசிய புலனாய்வால் மற்றொருவர் கைது

இந்தியா – இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள், ஆயுத வியாபாரம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் தொடர்பில் மற்றொருவரை இந்தியாவில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ (NIA) கைது செய்துள்ளது.

இது தொடர்பில் தமிழகத்தில் வைத்து முக்கிய சந்தேகநபரான லிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

சென்னையில் வசிப்பவர், லிங்கம் மற்றொரு குற்றஞ்சாட்டப்பட்ட குணசேகரனின் நெருங்கிய நண்பனாக இருந்துள்ளார்.

அத்துடன் இந்தியாவிலும் இலங்கையிலும் போதைப்பொருள் மற்றும் ஆயுத வர்த்தகத்தின் வருமானத்தில் மோசடி செய்வது தொடர்பான சட்டவிரோத பரிவர்த்தனைகளுக்கும் லிங்கம் முக்கியமானவராக செயற்பட்டு வந்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட லிங்கம், இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதை சட்டப்பூர்வமாக்கும் முயற்சியில் மோசடி உறுப்பினர்களுக்கான போலி அடையாள ஆவணங்களையும் தயாரித்துள்ளதாக என்.ஐ.ஏ விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை இவர்கள், பாகிஸ்தானியரான ஹாஜி சலீம் என்பவரிடம் இருந்து இந்த சட்டவிரோத போதைப்பொருட்களைப் பெற்றனர் என்பதும் என்.ஐ.ஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலையில் பதிவு செய்யப்பட்ட சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுத வியாபார வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 14ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
world 11
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புதிய வீடுகளுக்கு நீர் வழங்கல் சபையின் அனுமதி கட்டாயம்: புதிய நடைமுறை விரைவில்!

இலங்கையில் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் போது, வீட்டின் உட்புறக் குழாய் கட்டமைப்புகளுக்கு (Internal Plumbing) நீர்...

world 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சூரியன் நாளை நேர் உச்சியில்: பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

இலங்கையில் நிலவும் வறண்ட வானிலைக்கு மத்தியில், நாட்டின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 07, 2026)...

world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...